Friday, June 4, 2010

கூடுவில் நான்

சமையல் குறிப்புகளில் இருந்து சற்று வேறு பட்ட பதிப்பு இது. ஒரு பெண்களால் பெண்களுக்கு தொடங்க பட்ட அமைப்பில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன்... இருக்கின்றேன்.. அந்த அமைப்பை பற்றி ஒரு சிறிய பதிப்பு.

மதுரையில் 5 வருடங்களுக்கு முன்பு பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் "கூடு". பல தரப்பட்ட பெண்கள் {வேலைக்கு போகும் பெண்கள் , கல்லூரியில் படிக்கும் பெண்கள் ,house wives} கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு இடமாகும்.பல தரப்பட்ட பெண் எழுத்தாளர்கள் படைப்பினை, கலந்து உரையாடுவோம். பெண்ணியம் பற்றிய கருத்துகளும் விவாதித்து வருகிறோம் .ஒவ்வொரு வருடமும் கூடு ஆண்டு விழா கொண்டாடுகிறோம்.
இந்த
வருடம் நாங்கள் அந்த வைபவத்தை கூடுதலாக கொடைக்கானல் பண்ணைக்காட்டில் கொண்டாடினோம். இந்த கொண்டாட்டதில் முக்கிய பாகம் எழுத்து பட்டறை. இரண்டு நாட்கள் நடந்த இந்த பட்டறையில் எழுதுவது எப்படி என்பதை கற்றுக்கொண்டோம். அதை விட முக்கியமாக தோழியர்கள் 14 பேரும் சேர்ந்து 2 நாட்கள் அந்த climate ஐ அனுபவித்து மகிழ்ந்தோம்.

இன்னும் வரும் ஆண்டுகளிலும் இந்த அமைப்பின் நிகழ்வுகளை சிறு சிறு தொகுப்புகளாக பதிவு செய்கின்றேன். மறுபடியும் மற்றும் ஒரு பதிவில் சந்திப்போம்.

வாழ்க வளமுடன்... வளர்க நலமுடன்...

.

1 comment:

  1. மைசூர் ராணியாகிய உங்களின் எழுத்து முத்து முத்தாக இருந்தது. அவரைக்காய் தோட்டத்தையும் ஓடி விளையாண்டதையும் ஆடி பாடியதையும் இன்னும் கொஞ்சம் செய்து காட்டியுருக்கலாம். முதல் பதிவு உங்களுடையது தான். வாழ்த்துக்கள் - சாலை செல்வம்

    ReplyDelete