தேவையான பொருட்கள்:
- மட்டன் - 1/2 கிலோ
- இஞ்சி பூண்டு விழுது- 1 table spoon
- சின்ன வெங்காயம் - 150 கிராம் ( பொடியாக நறுக்கியது)
- தக்காளி - 150 கிராம்
- கடுகு உளுத்தம் பருப்பு - 1/4 tea spoon
- பெருஞ்சீரகம் - 1/4 tea spoon
- கரம் மசாலா தூள் - 1/8 tea spoon
- கறி வேப்பிலை
- கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது
- தேங்காய் பால் -1 cup
- வீட்டில் அரைத்த மசாலா பொடி - 2 tea spoon
- மிளகாய் பொடி - சிறிது அளவு
- தேங்காய் -1 பெரிய பத்தை
- கச கசா -1/2 spoon
- முந்திரி பருப்பு - 10
- சோம்பு - 1/4 கரண்டி
செய் முறை:
- குக்கரில் 1 குழி கரண்டி எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
- கடுகு உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்
- சோம்பு போட்டு பொரிக்கவும்.
- வெங்காயம் போட்டு மினு மினுப்பாக வரும் வரை வதக்கவும்
- கறி வேப்பிலை கொத்த மல்லி போட்டு வதக்கவும்.
- நறுக்கிய தக்காளி போட்டு நன்கு மசியும் வரை வதக்கவும்.
- மட்டன் -ஐ சேர்த்து மேலும் சிறுது வெண்மை நிறம் வரும் வதக்கவும்
- மசாலா பொடி சேர்க்கவும். 2 நிமிடம் வதக்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- கரம் மசாலா சேர்த்து கொள்ளவும்.
- அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்கவும்.
- 1 நிமிடம் வதக்கவும்.
- தேங்காய் பால் ஊற்றி தேவையான அளவு ஊற்றி குக்கரை மூடவும்.
- ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து 15 -20 நிமிடம் வைக்கவும்.
- ஸ்டீம் அடங்கிய உடன் விசில்- ஐ எடுத்து நறுக்கி வைத்துள்ள கொத்த மல்லி தூவி அலங்கரிக்கவும்.
- சுவையான கொழம்பு ரெடி.
- இதை இட்லி, தோசை, பூரி உடன் சாப்பிடலாம்.
- சாதத்துடன் சேர்ந்து சாப்பிட சிறிது புளி சேர்த்து கொள்ளவும்.
No comments:
Post a Comment