- மட்டன் - 1 /2 கிலோ
- சீர க சம்பா அரிசி - 3 /4 கிலோ
- நெய் 200 கிராம்
- இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
- பெரிய வெங்காயம்- 200 கிராம்
- தக்காளி - 300 கிராம்
- பச்சை மிளகாய் - 10
- புதினா 1 கப்
- கொத்தமல்லி தழை 1 கப்
- முந்திரி பருப்பு விழுது 25 கிராம்
- தேங்காய் பால்
- வத்தல் பொடி - 3 ஸ்பூன்
- உப்பு
- தயிர் 50 கிராம்
செய்முறை
- மட்டன்- ஐ 50 கிராம் தயிர், 1 ஸ்பூன் வத்தல் பொடி, சிறிது அளவு உப்பு சேர்த்து குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடித்து விட்டு சிறிது அளவு நெய் போட்டு வறுக்கவும்
- குக்கரில் 200 கிராம் நெய் போட்டு, காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்
- நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
- கொத்தமல்லி புதினா வதக்கவும்
- தக்காளி போட்டு, சிறிது உப்பு போட்டு வதக்கவும்
- ஊற வைத்துள்ள மட்டன்- ஐ சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் மீதம் உள்ள வத்தல் பொடி சேர்க்கவும். தேவையான அளவு கரம் மசாலா சேர்க்கவும்... நன்கு வதக்கவும்...
- அரைத்து வைத்த முந்திரி விழுது சேர்க்கவும்
- 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி மட்டன்-ஐ விசில் வந்த பிறகு, சிம் - இல் 10 நிமிடம் வேக விடவும்.
- ஸ்டீம் அடங்கிய உடன் குக்கரை திறந்து நன்கு கிளறவும்.
- அரிசி : தண்ணீர் : தேங்காய் பால் :: 1 : 1 .25 :1
- மட்டன் வெந்த பிறகு உள்ள தண்ணீரை சேர்த்து தான் மேல் கூறிய விகிதம்
- முதலில் தண்ணீர் + தேங்காய் பால் சேர்த்து கொதித்த பிறகு அரிசி சேர்க்கவும்.
- விசில் வந்த பிறகு 7 நிமிடம் சிம்-இல் வைத்து இறக்கவும்.
சுவையான மணமான மட்டன் பிரியாணி தயார்.
No comments:
Post a Comment